Thursday 2nd of May 2024 12:47:25 AM GMT

LANGUAGE - TAMIL
-
லடாக் எல்லைப் பகுதிக்கு இன்று  இந்தியப் பிரதமா் மோடி திடீா் விஜயம்!

லடாக் எல்லைப் பகுதிக்கு இன்று இந்தியப் பிரதமா் மோடி திடீா் விஜயம்!


இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி இன்று காலை லடாக் எல்லைப் பகுதிக்கு திடீா் விஜயம் செய்து அங்கு நிலைமைகளை ஆராய்ந்தார்.

பிரதமர் மோடி இன்று காலை எல்லைப் பகுதியில் உள்ள லே (Leh Airport) விமான நிலையத்தை சென்றடைந்தாா்.

எல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவிவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

லடாக் சென்றுள்ள பிரதமா் அங்கு எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரைச் சந்தித்துப் பேசினார். கால்வன் பள்ளத்தாக்கில் சீனப் படையினருடன் நடந்த மோதலில் காயமடைந்து இந்திய இராணுவத்தினரை அவா் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமருடன் இந்திய இராணுவ ஜெனரல் பிபின் ராவத்தும் லடாக் சென்றுள்ளாா்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE